யாழ். வந்த திருமாவளவன் மரம் நாட்டினார்

விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ் வந்துள்ள திருமாவளவன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்ககமைய இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்களை நாட்டி வைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.